Monday, September 30, 2013

Mail வந்தால் Mobile க்கு Message வரும்


 எல்லோருக்கும் இப்போது மெயிலும்,
கைப்பேசியும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சில முக்கியமான செய்திகளை
தாங்கி வரும் மெயில்களை படிக்காமல் விட்டதல் பல தொல்லைகளை நீங்கள்
சந்தித்து இருக்கின்றீர்களா. ஆம் என்று நீங்கள் சொன்னால், உங்களுக்கு இனி
அந்த கவலை தேவையில்லை. இல்லையென்று சொல்பவர்கள் அதிஷ்ட்டசாலிகள்
உங்களுக்கு இனி அந்த தொல்லையே இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியவை -
முதலில் way2sms-ல் ஒரு அக்கௌன்ட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
படம் 1 -
 
அடுத்து படம் 1ல் காட்டியுள்ளவாரு Mail என்பதனை கிளிக் செய்து  உங்களுக்கென ஒரு மெயில் ஐடியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
படம் 2 -

அதன்பிறகு mail alerts என்பதை சொடுக்கினால் படம் 2-ல் காட்டியுள்ளபடி
வரும். அதில் உங்கள் கைப்பேசி எண்ணையையும், எப்போது உங்களுக்கு மெயில்
வரும் செய்தி தெரியவேண்டும் என்ற கால அளவையையும் கொடுத்துவிடுங்கள்.
இதோடு இங்கு(way2sms) வேலை முடிந்துவிட்டது. இனி நீங்கள்
ஜிமெயிலை பயன்படுத்துபவராக இருந்தால்,…(படம் 3)
படம் 3-

உங்கள் ஜிமெயில் அக்கௌன்டில்,..
Settings –> Forwarding and pop IMAP –> Forward a copy of
incoming mail to என்பதை தேரிவு செய்து, அதன் முதல் கட்டத்தில் உங்கள்
way2sms மெயில் ஐடியை எழுதுங்கள், இரண்டாம் கட்டத்தில் keep Gmail’s copy
in the inbox என்பதை தேர்வு செய்யுங்கள்.
யாகூ மெயிலை பயன்படுத்துபவராக இருந்தால்,….(படம் 4)
படம் 4-

உங்கள் யாகூ மெயில் அக்கௌன்டில்,..
options –> Pop access and forwarding –> forwarding என்பதை
தேர்வு செய்து விட்டு, கட்டத்தில் உங்கள் way2sms மெயில் ஐடியை எழுதுங்கள்.
இனி ஒவ்வொரு மெயில் வரும் செய்தி உங்கள் கைப்பேசிக்கே வந்துவிடும்.

No comments:

Post a Comment